தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மேற்குவங்க மாநிலம், ஜல்பாய்குரியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அலுவாலியாவும் கலந்து கொண்டார்.
பின்னர் தில்லிக்கு திரும்பி வந்த அவருக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அலுவாலியாவின் உடல்நிலை புதன்கிழமை மோசமடைந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அலுவாலியா தெரிவித்தார். இதையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.