புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதையை செலுத்தினர்.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல் இன்று மாலை தில்லி பாலம் விமானப் படை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், முப்படைத் தளபதிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் மலர் வளையம் வைத்து தங்களது இறுதி மரியாதை செலுத்தினர்.