ப.சிதம்பரத்தின் மனைவி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி 'திடீர்' விலகல் 

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் மனைவி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி 'திடீர்' விலகல் 

புது தில்லி: ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த  சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ் மற்றும்  சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார். 

இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் வழக்கறிஞராக ஆஜராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com