அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கோல்ஹாட் உள்ள சல்மாரா தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் கோல்ஹாட் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்து உள்ளது.
இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 2 கலால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.