
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஷோபியான் மாவட்டத்தில் உள்ள மீமெந்தார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குப் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.