தலைநகர் தில்லியில் எப்போதும் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் கரோல்பாக் பகுதியில் புதன்கிழமை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: கரோல்பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக காலை 8.40 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள், மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் கரோல்பாக்கில் தேவ் நகரில் உள்ளது. அந்த 4 மாடிக் கட்டடத்தில் தரை தளத்தில் கடைகள் இருந்தன. 4-ஆவது தளம் காலியாக இருந்தது. இதில் உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. என்றார் அந்த அதிகாரி.
மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.