விவசாயிகளின் மின் கட்டணத்துக்கு மானியம் வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தில்லி அரசு வட்டாரங்கள் கூறுகையில், விவசாயிகளின் மின்கட்டணத்தில் மாதமொன்றுக்கு 1 கிலோ வாட் மின்சாரத்துக்கு ரூ.105 மானியமாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம் 2018-19, 2019-20 நிதியாண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த மானியம் கடந்த 2018 ஏப்ரல் 1- ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படவுள்ளது என்றன.