என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்: பாஜக-வுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

மோடி பெயரைச் சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் என பாஜக-வை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.
என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்: பாஜக-வுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

மோடி பெயரைச் சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் என பாஜக-வை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக காகிநாடா மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது அவரது வாகனத்தை ஆந்திர பாஜக தலைவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டனக் குரல்களை எழுப்பினர்.

இதையடுத்து பாஜக மாவட்டத் தலைவர் உட்பட அந்த மறியலில் ஈடுபட்டவர்களை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார். 

என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வெளியே சென்று சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். ஆந்திராவில் மோடியை ஆதரிப்பதற்கு பாஜக-வினர் வெட்கப்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com