ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்!

ராஜ்நாத் சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக
ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்!


புதுதில்லி: ராஜ்நாத் சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்துள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமா தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகையான குழுக்களின் பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்து அறிவித்துள்ளது. 

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளம்பர குழுவிற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கட்சியின் மேல்முறையீட்டை தயாரிக்கும் பணிக்குழு, பைக் ரேலி குழு, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் விளம்பர குழு, தேர்தல் பிரச்சார குழுக்குளுக்கு, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் அருண் சிங் தலைமையில் மன் கி பாத் குழு உள்பட பலர் பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com