உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முழு வலிமையுடன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
துபையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. அவர்கள் அரசியல் முடிவை எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வலுப்படுத்தவேண்டும் என்பது எங்களிடம் உள்ளது. எங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி அங்கு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வோம்" என்றார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 இடங்களில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைவர்கள் முறையே மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து கூட்டணியை உறுதி செய்தனர்.