பெங்களூருவாசிகளாக இருந்தால் இது மகிழ்ச்சிதரும் செய்திதான்

பெங்களூரு மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களின் காரணமாக, ஜனவரி 13ம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
பெங்களூருவாசிகளாக இருந்தால் இது மகிழ்ச்சிதரும் செய்திதான்


பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களின் காரணமாக, ஜனவரி 13ம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

பொதுவாக பெங்களூரு மெட்ரோ ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்குத்தான் முதல் சேவையைத் தொடங்கும்.

8 மணி என்பது மிகவும் தாமதமான நேரம். அன்றைய தினம் பணிக்குச் செல்வோருக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். காலை 5 மணிக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.

இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 13ம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மெட்ரோ ரயில் சேவையை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்குத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com