பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களின் காரணமாக, ஜனவரி 13ம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
பொதுவாக பெங்களூரு மெட்ரோ ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்குத்தான் முதல் சேவையைத் தொடங்கும்.
8 மணி என்பது மிகவும் தாமதமான நேரம். அன்றைய தினம் பணிக்குச் செல்வோருக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். காலை 5 மணிக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 13ம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மெட்ரோ ரயில் சேவையை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்குத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.