ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்ட பயங்கரவாதி உட்பட 2 பேர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் தேடப்பட்டு வந்த அல்-பாதர் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜீனத்-உல்-இஸ்லாம் மற்றும் அவனது கூட்டாளி ஷகீல் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.