புதுச்சேரி: தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தடிமன் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது கூடுமானவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்றும், இந்த தடையானது வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.