கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து: காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் 12 பாஜகவுக்கு தாவலா? 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் பாஜக பக்கம் தாவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து: காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் 12 பாஜகவுக்கு தாவலா? 

    
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் பாஜக பக்கம் தாவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கூட்டணி அரசு நடத்தி வரும் மஜதவும், காங்கிரஸும் பல்வேறு பிரச்னைகளில் அவ்வப்போது ஒருவர்மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அமைச்சரவையில் காலியாக இருந்த இடங்களை காங்கிரஸ் அண்மையில் நிரப்பியது. மேலும், புதிய அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதற்காக ஏற்கெனவே அமைச்சர்களாக உள்ள காங்கிரஸாரின் துறைகளையும் அக்கட்சி மாற்றியமைத்தது.

கூட்டணி அரசில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வராக இருக்கும் ஜி.பரமேஸ்வர், காவல், பெங்களூரு வளர்ச்சி ஆகிய இரு துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற துறை மாற்றத்தின் போது, அவரிடம் இருந்த காவல் துறை பறிக்கப்பட்டு, புதிதாக அமைச்சரான எம்.பி.பாட்டீலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸில் இருக்கும் முன்னணித் தலைவர்களும் எதிர்பார்க்கவில்லை.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனது ஆதரவாளர் எம்.பி.பாட்டீலுக்கு வழங்குவதற்காக ஜி.பரமேஸ்வரிடம் இருந்து அதிகாரம் குவிந்த காவல் துறையை பறித்துவிட்டார் என்று கூறப்பட்டது. இது காங்கிரஸில் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், இதே பிரச்னை மஜதவிலும் எதிர்வினைக்கு காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவின் மூத்த மகனும், முதல்வர் எச்.டி.குமாரசாமியின் அண்ணனுமான எச்.டி.ரேவண்ணா, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர், காங்கிரஸ் அமைச்சர்களின் துறைகளில் தலையிட்டு வருவதாகவும், அதிகாரிகளின்  பணியிட மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்கி வருவதாகவும் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், ஜி.பரமேஸ்வரிடம் இருந்து காவல் துறையை பறித்துவிட்டதாக காங்கிரஸ் மீது எரிந்துவிழும் எச்.டி.ரேவண்ணா, துணை முதல்வராக உள்ள ஜி.பரமேஸ்வர், காவல் துறையை சிறப்பாக நிர்வகித்து வந்தவரிடம் இருந்து காவல் துறையை காங்கிரஸ் பறித்துள்ளது. காவல் துறையை அவர் நிர்வகித்தது காங்கிரஸில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லையா? என்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வர், காவல் துறையை நிர்வகித்து வந்ததில் என்ன தவறுவிட்டார் என்று அவரை மாற்றிவிட்டனர்?

காங்கிரஸ் மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றியதோடு, காவல் துறையை சிறப்பாக நடத்தி வந்தார்.  துணை முதல்வராக காவல் துறை, அவரிடம் இருந்திருக்க வேண்டும். காங்கிரஸ் ஏன் அப்படி செய்தது என்பது தெரியவில்லை. அவரது துறையில் நான் தலையிட்டதில்லை.

பரமேஸ்வரின் கட்சியால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் துணை முதல்வராக இருப்பதை சகித்துக் கொள்ளாதா? உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கியதற்கு என்னை ஏன் காரணமாக்குகிறீர்கள்? அவரது துறை மாற்றத்துக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், மஜதவைச் சேர்ந்த முதல்வர் குமாரசாமியின் அரசியல் செயலராக காங்கிரஸ்காரரை அக்கட்சி நியமித்துள்ளது. முதல்வர் குமாரசாமி, தன்னால் முடிந்த வரை காங்கிரஸ் தலைவர்களின் செயல்களை சகித்துக் கொள்வார். ஆனால், ஒருநாள் என்ன நடக்கும் என்பது தெரியாது என ரேவண்ணா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான தீவிர வேலைகளில் பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் என 12 எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ள என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com