சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து படத்தில்,
"பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள்.
இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற
நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்திகிறோம்.
உங்கள் நரேந்திர மோடி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகர சங்கராந்தி, உத்ராயணம், மகா பிகு ஆகிய பண்டிகைகளுக்கு அவர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.