காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் நாடுகளிடையே செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் காஷ்மீரின் சுந்தர்பானி அருகே இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இதனிடையே கதுவா மாவட்டம் ஹிராநகரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்தள்ளார். இதனால் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com