ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் போக்குவரத்து காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராஜ்பாக் சாலையில் ஜீரோ பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கையெறி குண்டை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், 3 போக்குவரத்து காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆவார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.