ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியில் கையெறி குண்டு வீசித் தாக்குதல்: போக்குவரத்துக் காவலர்கள் 3 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் போக்குவரத்து காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த பாதுகாப்புப் படை உயரதிகாரிகள்.
ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த பாதுகாப்புப் படை உயரதிகாரிகள்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் போக்குவரத்து காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராஜ்பாக் சாலையில் ஜீரோ பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கையெறி குண்டை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், 3 போக்குவரத்து காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆவார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com