நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்டது மோடி அரசு: மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு

நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். எங்கள் கூட்டணியில் எல்லோருமே
நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்டது மோடி அரசு: மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு


கொல்கத்தா: நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெற்று வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளன. 5 ஆண்டுகளில் நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்டது. நாட்டில் பொருளாதாரம் சிதைந்து விட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் இல்லாத மோடி ஆட்சியால், ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது பாஜக. ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை அழித்துவிட்டது மேடி அரசு. 

தம்மைத்தவிர மற்றவர்கள் யாருக்கும் நேர்மை இல்லை என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. மோடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றனர். புதிய விடியல் வர உள்ளது. தில்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றார். 

நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். எங்கள் கூட்டணியில் எல்லோருமே தலைவர்கள்தான். பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி என்றார் மம்தா. 

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத்தைச் சேர்ந்த ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com