புதுதில்லி: தில்லியில் நாளை நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுதில்லியில் நாளை திங்கள்கிழமை (ஜன.28) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.