வங்கி மோசடி வழக்குகளுக்கு எதிராக நடவடிக்கை : நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை 

வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.
வங்கி மோசடி வழக்குகளுக்கு எதிராக நடவடிக்கை : நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை 

புது தில்லி: வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

நாடு முழுவதும் வங்கி மோசடிகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகளின் மூலமாக மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.640 கோடி ஆகும். இந்த வழக்குகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்த மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருங்கிணைந்த முறையில் பிரத்யேக சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com