ரூ.20 நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், பார்வை அற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
வங்கிகள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பரவலான புகார்கள் எழுந்துள்ளநிலையில் மத்திய பட்ஜெட்டில் ரூ.20 நாணயம் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.