விடுதி உணவு எடுத்துக்கொண்ட தெலங்கானா சிறுபான்மை உண்டு, உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவர்கள் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் உணவு சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மற்றும மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு மாணவர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.