உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்ற வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக ஆயுதக் கடத்தல் தொடர்பாக புதிதாக வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ, நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.