புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி மறுத்துவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க எதிர்மனுதாரரான கே. லட்சுமிநாராயணனுக்கு உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், புதுச்சேரி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதிதாக மனு தாக்கல் செய்தார். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் நிதிச் செலவினங்கள், நிலப் பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பான முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. அத்துடன் கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் மேலும் அதிகார மோதல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகவும் அதில் வலியுறுத்தி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com