பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ நாகராஜ், மீண்டும் கட்சிக்கேத் திரும்ப முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் எம்எல்ஏ நாகராஜிடம் சாமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சிவக்குமார், அவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். நடந்ததை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் சிவக்குமார் கூறினார்.