அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக பயணம் தொடங்குவது முதல், லிங்கத்தை தரிசித்து திரும்புவது வரையிலான காலகட்டம் என்பது மிகவும் சவாலானது.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கே இது சவால் என்றால், முதியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் சொல்லவே வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல், இயற்கையின் சில தாக்குதல்களையும் தாண்டித்தான் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
அவ்வாறு அவர்களது பயணத்துக்கு பேருதவியாக இருப்பது இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்தான்.
தங்களது இன்னுயிரைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சல்யூட் அடித்து நன்றி தெரிவித்தனர் அமர்நாத் பக்தர்கள்.