புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரி விவேக் குமாா் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
பிரதமா் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வரும் விவேக் குமார், கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிவான இந்திய அயலகப் பணித்துறையின் அதிகாரியாக தேர்வானவர்.
விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.