பெங்களூரு: இன்று மதியத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருக்கும் நிலையில், கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் இன்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்களின் அமளியால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 2வது நாளாக நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் குமாரசாமி உரையாற்றி வருகிறார்.