பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சிறிய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த இரண்டு புகைப்படங்களுடன், "தன்னைக் காண அன்பு நண்பர் ஒருவர் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒரு புகைப்படத்தில், அந்த குழந்தை மேசையில் இருக்கும் சாக்லெட்டை பார்க்கும் விதம் சமூக வலைதளவாசிகளைக் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.