முத்தலாக் தடை மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது.
உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யம் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்ய வழி வகுக்கும் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா மீது மக்களவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
வாக்கெடுப்பின் முடிவில் 303 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இன்றைய விவாதத்தின்போது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் தடை மசோதா மீதான காரசார விவாதம்: http://bit.ly/2Y4FgOp