நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.