எஸ்.எம்.கிருஷ்ணா மூத்த மருமகனும், காஃபி டே நிறுவனருமான சித்தார்த்தா மாயம்

எஸ்.எம்.கிருஷ்ணா மூத்த மருமகனும், காஃபி டே நிறுவனருமான சித்தார்த்தா மாயம்

எஸ்.எம்.கிருஷ்ணா மூத்த மருமகனும், காஃபி டே நிறுவனருமான சித்தார்த்தாவை மங்களூருவின் நேத்ராவதி நதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா மூத்த மருமகனும், காஃபி டே நிறுவனருமான சித்தார்த்தாவை மங்களூருவின் நேத்ராவதி நதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபலமான கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் ஆவார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய காஃபி எஸ்டேட் வைத்திருப்பவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து 375 கி.மீ. தொலைவில் மங்களூருவில் நேத்ராவதி நதியின் அருகே சென்றவுடன் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு நடந்து சென்றவர் ஒருமணிநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடக அரசியல் தலைவர்கள் செவ்வாய்கிழமை அதிகாலை முதல் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com