சென்னை: இங்கே வழிகிற ரத்தம், அங்கே வட்டமா பொட்டு என்று நமது அம்மா நாளிதழில் இன்று ஸ்டாலினைப் பற்றி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் பிரசாரங்களில் ஸ்டாலினுக்கு கட்சிக்காரர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டார்கள். உடனே ஆவேசப்பட்ட ஸ்டாலின், அவர்கள் முன்னிலையிலேயே ஆவேசமாக பொட்டை அழித்துவிட்டார். இந்த நிகழ்வுகள் திருவரங்கத்து கோயில் வாசல் வரை நீடித்தது.
ஆனால் நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பதவிப்பிரமாணத்துக்கு போனவர் சிவ கடாட்சமாக மாறி முழு நிகழ்ச்சியிலும் நெற்றியிலே ஒத்த ரூபா அளவுக்கு பொட்டு வைத்த வண்ணம்தான் உட்கார்ந்திருந்தார். உரையாற்றினார். உலா வந்தார்.
இதென்னடா ஆச்சரியம். தமிழ்நாட்டில் என்றால் அது வழிகிற ரத்தமா? ஆந்திராவில் மட்டும் அது அழகிய பொட்டாகுமா? சரி சரி இன்னும் என்னென்ன காத்திருக்கோ என்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.