புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் புதிய நாடாளுமன்ற நிர்வாக குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் புதிய நாடாளுமன்ற நிர்வாக குழு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி - தலைவர்
தேசியத் தலைவர் - அமித்ஷா
மக்களவை துணைத் தலைவர் - ராஜ்நாத் சிங்
மாநிலங்களவை தலைவர் - தாவர்சந்த் கெலாட்
மாநிலங்களவை துணை தலைர் - பியூஷ் கோயல்
அரசு கொறடா - பிரகலாத் ஜோஷி
அரசு துணை கொறடா - அர்ஜுன் ராம் மேக்வால் (மக்களவை); முரளிதரன் (மாநிலங்களவை)
இவர்கள் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.