ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் பார் கவுன்சிலுக்கு தேர்வான முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆக்ரா நீதிமன்றத்தில் தனது நண்பரும், சக வழக்குரைஞருமான மணீஷ் ஷர்மா, தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்டார். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் தர்வேஷ் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.
அடுத்த நொடியே, மணீஷ் ஷர்மா அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே தர்வேஷ் உயிரிழந்துவிட்டார். மணீஷ் ஷர்மா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரயாக்ராஜில் ஜூன் 9ம் தேதி நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் தர்வேஷ் யாதவ் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் மணீஷ் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.