ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நடந்த பயங்கரவாத் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அனந்தநாக் பகுதியில் கே.பி. ஜோக் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்கதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.