முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விரைவில் வேறு அரசு இல்லத்துக்கு மாற இருக்கிறார். கடந்த அமைச்சரவையில் நிதித்துறைக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார். அப்போது அவருக்கு கிருஷ்ணா மேனன் மார்க்கில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டார்.
எனினும், இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். மேலும், மாநிலங்களவை பாஜக தலைவராகவும் உள்ளார். எனவே, அவருக்கு அரசு சார்பில் மத்திய அமைச்சர்களுக்கு இணையாக இல்லம் ஒதுக்கப்படும்.
8 படுக்கையறைகள் கொண்ட பங்களா, 4 பணியாளர்களுக்கான வீடு, இரு கார் நிறுத்துமிடம், வீட்டின் முன்னும் பின்னும் பெரிய முற்றம் உள்ளிட்டவை அருண் ஜேட்லிக்கு ஒதுக்கப்படும் புதிய இடத்திலும் இருக்கும்.