ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின்  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின்  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவந்திபூரா மாவட்டத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இர்ஃபான் அகமது மற்றும் தஸாதுக் ஷா ஆகிய இருவரும் லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com