பாட்னா: பிகாரில் வாட்டி எடுக்கும் அனல் காற்றுக்கு இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி மற்றும் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துக் காணப்படுகிறது. வாட்டும் வெயிலுடன் வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இரண்டின காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிகார் மாநிலத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அவுரங்காபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேரிட்டுள்ளது. இங்கு வெப்பநிலையானது 45.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.