காஷ்மீர்: ஹிஸ்புல் ஆதரவாளர்கள் 5 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 5 பேரை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 5 பேரை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஆகிப் நஸீர் ரதார், அமீர் மஜீத் வானி, சமீர் அகமது பட், பைசல் ஃபரூக், ரயீஸ் அகமது ஆகிய 5 பேரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷோபியான் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த ஹிஸ்புல் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக சக்திவாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் தயாரித்ததும், அதற்கு 5 பேரும் உதவியதும் கண்டறியப்பட்டது. 
அந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com