திருப்பதியில் போலீஸாருக்கு வார விடுமுறை அமல்

திருப்பதியில் போலீஸாருக்கு வேலைபளு இருந்தாலும் அவர்களுக்கும் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்தார்.
வார விடுமுறை அளித்ததை கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறையினர்.
வார விடுமுறை அளித்ததை கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறையினர்.


திருப்பதியில் போலீஸாருக்கு வேலைபளு இருந்தாலும் அவர்களுக்கும் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் கூறியது:
 ஆந்திர மாநில காவல் துறையினருக்கு வார விடுமுறை விதித்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆணை ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதிக்கு விஐபி-க்களின் வருகை அதிகம் உள்ளதால் வார விடுமுறை அமல்படுத்துவதில் சிக்கல் இருந்தது. 
எனினும், காவல் துறையினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் இல்லாததாலும், 19 விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுப்பு அளிக்கப்படுவதாலும், திருப்பதியில் வார விடுமுறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதை ஊழியர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். வார விடுமுறையை அமல்படுத்தியதன் மூலம் ஊழியர்களுக்கு பணிச் சுமையிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com