காங்கிரஸ் தலைவராகிறார் அசோக் கெலாட்?

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து உறுதியாக உள்ளதால், அக்கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள
காங்கிரஸ் தலைவராகிறார் அசோக் கெலாட்?

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து உறுதியாக உள்ளதால், அக்கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக் கெலாட் தலைவராவதற்கு, பல்வேறு மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அண்மையில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலைவிட வெறும் 8 இடங்களே அக்கட்சிக்கு அதிகம் கிடைத்தன. அதுமட்டுமன்றி, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.

80  தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. 

அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அவரது தோல்வி, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதவி விலகுவதில் உறுதி: மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. "கட்சித் தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும்; கட்சியை அமைப்புரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கு அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது' என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று பல்வேறு மூத்த தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்தினர். ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதால், அப்பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுவார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அசோக் கெலாட் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு தில்லி காங்கிரûஸச் சேர்ந்த பல தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டாலும், ராஜஸ்தான் முதல்வராக அவர் தொடர்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com