ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை திருமலை வந்தடைந்தார்.
ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆந்திர மாநில அமைச்சர் அமர்நாத் ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றிரவு இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கும் விக்ரமசிங்கே தம்பதியர் நாளை அதிகாலை வெங்கடாஜலபதியை வழிபாடு செய்கின்றனர்.
இலங்கை பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.