நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது: நிதின் கட்கரி

நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது: நிதின் கட்கரி

நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாக்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், விமான நிலையங்களில் சிறுநீர் சேமிக்கும் வசதி வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உரங்களை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது. 

ஏனென்றால் சிறுநீரில் அதிகப்படியான ஆற்றல் வளம் இருக்கிறது. எதுவும் வீணாகாது. என்னுடைய சிந்தனைகள் எல்லாம் சிறப்பாக இருப்பதால் மற்றவர்கள் என்னுடன் ஒத்துழைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com