பாகிஸ்தான் கதவடைத்த காரணத்தால் பூஞ்ச், ராவல்கோட் இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை தடைப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கதவை பாகிஸ்தான் திங்கள்கிழமை மூடியது.
காஷ்மீர் பகுதியில் இந்திய எல்லையில் அமைந்துள்ள பூஞ்ச் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ராவல்கோட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சாலைப் போக்குவரத்து இதனால் முடங்கியது.
ஸீரோ பாய்ன்ட் எனப்படும் இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கதவை தான் பாகிஸ்தான் தற்போது மூடியுள்ளது.