
ஒரே தொகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால், போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை, பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்க குழப்பமே நிலையே இருந்து வந்தது.
இதனை தவிர்க்கும் விதமாக வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட்டு இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தபால் தலை அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.