தோனி, கோலியிடம் வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டி பிரதமர் மோடி ட்வீட்

நாடு முழுவதும் 18 மற்றும் 19 வயதுடைய 15 மில்லியன் முதல்முறை இளம் வாக்காளர்கள் உள்ளனர். 
தோனி, கோலியிடம் வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டி பிரதமர் மோடி ட்வீட்

நாடு முழுவதும் 18 மற்றும் 19 வயதுடைய 15 மில்லியன் முதல்முறை இளம் வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் நடைபெறவுள்ள சூழலில் இவர்களுக்கு வாக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இளம் வக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களை டேக் செய்து கோரிக்கை விடுத்து புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார். 

அதில், கிரிக்கெட் மைதானங்களில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் நீங்கள், 130 கோடி இந்தியர்களிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வருகிற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெற உதவி புதிய சாதனைப் படைக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் அது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனறு பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com