அரசியலில் பகை பாராட்ட மாட்டேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அரசியலில் போட்டியாளர்களிடம் பகை உணர்வு கொள்ள மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அரசியலில் பகை பாராட்ட மாட்டேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


அரசியலில் போட்டியாளர்களிடம் பகை உணர்வு கொள்ள மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் நாகபுரி மக்களவைத் தொகுதியில், நிதின் கட்கரியை எதிர்த்து  முன்னாள் பாஜக எம்.பி.யான நானா படோல் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நானா படோலின் பெயர் இடம்பெற்றுள்ளது. நிதின் கட்கரி பாஜக சார்பில் நாகபுரியில் போட்டியிடவுள்ளார்.
அந்நகருக்கு வியாழக்கிழமை வருகை தந்த நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் யார் வேண்டுமானாலும் யாரை எதிர்த்தும் போட்டியிடலாம். எந்த வேட்பாளரையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நான் மேற்கொண்ட நலத் திட்ட பணிகளை மேற்கோள்காட்டி மக்களிடம் வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.
பாஜகவில் படோல் இருந்தபோது உங்களிடம் ஆசி பெற்றிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டால், வாழ்த்திய வாழ்த்தும் விலகிச் சென்றுவிடுமா? நான் யாரிடமும் பகை உணர்வு கொள்ள மாட்டேன். படோலுக்கு எனது வாழ்த்துகள் எப்போதும் இருக்கும் என்று பதிலளித்தார் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com