மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற வாசகத்தை பாஜக தேர்வு செய்துள்ளது
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும் பாஜக தேர்தல் பிரசார குழு தலைவருமான அருண் ஜேட்லி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றியுள்ளார். விரைவாக புரிந்து கொள்ளக்கூடிய அவர், சிக்கலான பிரச்னைகளில் விரைந்து முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார்.
செயல்படக்கூடியவர் என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வு செய்துள்ளதாக ஜேட்லி தெரிவித்தார்.