ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தபாயலு எனுமிடத்தில் அதிகாலை 198-ஆவது படாலியன் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நக்ஸலைட்கள் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.